ஏங்குகிறேன் – ஞாநி

சென்ற வாரம் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார் அமெரிக்க வாழ் நண்பர் அருள். ஒரு சிறுவன் விளையாட்டு பீரங்கி போன்ற ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து வீசப்படும் மிட்டாய்கள் எங்கே எவ்வளவு தொலைவு போகின்றன என்று கண்ணை அகல விரித்துக் கொண்டு குழந்தை போல ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒபாமா.

வெள்ளை மாளிகையில் இரண்டாவது வருடமாக நடக்கும் சிறுவர் – இளைஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புக் கண்காட்சியின்போது நடந்த நிகழ்ச்சி அது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து சுமார் 100 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடைய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது பள்ளிக்கூடங்களில் வழக்கமாக மாணவர்களுக்குப் பயிற்சிக்காக நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி போன்றது அல்ல.
மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஹேலீ, அமெரிக்காவின் காஃபிக் கடைகளில் சர்க்கரைப் பொடிகளை அடைத்துத் தரும் காகிதப் பாக்கெட்டுகளுக்கு மாற்றைக் கண்டுபிடித்திருக்கிறாள். “ஸ்டார்பக்ஸ் கம்பெனியின் காஃபிக் கடைகளில் மட்டுமே வருடத்துக்கு 20 லட்சம் பவுண்ட் குப்பை சேர்கிறது. இதை ஒழிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவும். அதனால்தான் ஹேலீக்கு இந்த ஐடியாவை வியாபாரமாக மாற்ற மாஸ்டர் கார்ட் கம்பெனி பத்தாயிரம் டாலர் பரிசு அளித்திருக்கிறது” என்று சொன்னார் ஒபாமா. ஹேலீ கண்டுபிடித்தது கரையக் கூடிய சர்க்கரைப் பை. உருளைக் கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து தயாரித்தது. ஹேலீக்கு வயது 16!
கான்சாஸ் நகரில் ஆறாவது படிக்கும் வெஸ்லியும் தாம்ப்சனும் மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸை உருவாக்கியிருக்கிறார்கள். இது வெறும் டிபன் பாக்ஸ் அல்ல. இதில் காலையில் வைத்த சாப்பாட்டை மதியம் எடுக்கும்போது சாப்பாடு கெடாமல் இருப்பதற்காக அல்ட்ரா வயலட் கதிர்கள் செயல்பட்டு உணவில் கிருமிகள் இல்லாமல் அழித்துவிடும்.
டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த மேரியானா ஆடு வளர்ப்பில் மரபியல் அறிவியலைப் பயன்படுத்தியிருக்கிறாள். தங்கள் பண்ணையில் வளர்க்கும் ஆடுகளின் ரோமம் செயற்கையான நிறத்தில் வளர்க்கப்படுவதை மாற்றி இயற்கையான நிறத்தில் வளர்வதற்கு மரபியல் கூறை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்திருக்கும் மேரியானாவுக்கு வயது 18.
அறிவியல் ஆய்வுகள் செய்து புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்ய மாணவர்களுக்குத் தேவையான நிதியை அவர்கள் பல விதங்களில் திரட்டியிருப்பதை ஒபாமா தன் பேச்சில் சுட்டிக்காட்டுகிறார். டெக்சாஸ் மாநிலத்திலேயே வசதி குறைவான பகுதியான பிரசிடோவில் மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வு செய்தார்கள். “இதற்குப் பணம் திரட்டுவதற்கு, ஆசிரியர்கள் தின்பண்டங்கள் சமைத்து சர்ச் வாசலில் விற்றார்கள். ஒரு ஆட்டை ஏலம் விட்டார்கள். 200 மைல் தொலைவில் போய் மலிவாக உணவு வாங்கிவந்து லாபத்துக்கு விற்றார்கள்” என்று ஒபாமா சொன்னார்.

கடலில் எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுவதால் கடல் நாசமாவதைத் தடுக்க, ஒரு மாணவன் ஒரு படகைக் கண்டுபிடித்திருக்கிறான். இந்த ஆளில்லாத படகை எண்ணெய்ப் படலம் உள்ள கடல்பரப்பில் இயக்கினால், அது அந்தப் படலத்தை நீரின் மேற்பரப்பிலேயே துடைத்து எடுத்துவிடும்.
இன்னொரு மாணவன் நியூயார்க்கைச் சேர்ந்த ஏய்டன் டையர். சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பெறுவது எப்படி என்று ஆய்வு செய்தான். மரங்களின் கிளைகள் மிக அதிக அளவு சூரிய ஒளியைப் பெற வசதியான வடிவத்தில் வளர்வதைக் கவனித்து அதைப் பின்பற்றி, சோலார் பேனல்களை அமைத்தால் அதிக சூரிய ஒளி பெறமுடியும் என்று நிரூபித்திருக்கிறான். கிளைகளின் அமைப்புகள் கணிதமுறையில் Fibonacci (ஃபிபனாச்சி) எண் அடிப்படையில் இருப்பதே அவன் ஆய்வுக்கு அடிப்படை. (முதல் இரு எண்களின் கூட்டுத் தொகையாக அடுத்த எண் இருப்பதே Fibonacci எண் வரிசை 0,1,1,2,3, 5,8, 13,21,34,55….. என்று போகும்.) இந்தச் சிறுவனுக்கு வயது 13.
கலிபோர்னியா மாணவி ஏஞ்செலா புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து நேரடியாக புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களுக்கே சென்று வேலை செய்ய வைப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆய்வு செய்திருக்கிறாள். இந்த ஆய்வைத் தொடர்வதற்காக அவளுக்கு சீமென்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் டாலர் பரிசளித்திருக்கிறது. ஏஞ்செலாவின் வயது 17.
ஜார்ஜியாவில் படிக்கும் இந்தியச் சிறுவன் ஆனந்த் சீனிவாசன், தம் மூளையின் மின்னலைப் பதிவுகளிலிருந்து (EEG) எடுத்த தகவல்களை வைத்து, கணினிக்கு ஒரு செயல் நிரலியை எழுதி அதைக் கொண்டு ஒரு ரோபோ கையை இயக்கமுடியுமா என்று ஆய்வு செய்திருக்கிறான். கை, கால், துண்டிக்கப்பட்டவர்கள், முடக்குவாதத்தில் செயலிழந்தவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பயன் தரக் கூடும். ஆனந்தின் வயது 15. விரல்களில்லாத ஒரு சிறுமி எழுத உதவுவதற்காக, செயற்கைக் கையை உருவாக்கியிருக்கும் அயோவாவைச் சேர்ந்த கேபி, மெக்கன்சி, கேட் மூவரும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்.
நெவாடாவைச் சேர்ந்த டெய்லர் வில்சன், சிறு அளவில் அணுக்கதிரியக்கமுள்ள பொருள்களை யாரேனும் எடுத்துச் சென்றால் கண்டறியக்கூடிய மானிட்டரை உருவாக்கியிருக்கிறான். துறைமுகங்களில் சரக்கு கண்ட்டெய்னர்களில் யுரேனியம் 234, ஆயுதத்துக்கான புளூட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் இந்த மானிட்டர் சொல்லிவிடும். டெய்லரின் வயது 17.
ஜெசிகா, காட்டன், ஆனா மூவரும் உருவாக்கியிருப்பது புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்தோரை, தங்க வைப்பதற்கான குடில். இதில் சுத்தமான குடிநீர், விளக்கொளி எல்லாம் மறுசுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியா மாணவன் பெனெடிக்ட் விளையாட்டு வீரர்களின் ஹெல்மெட்டில் பொருத்த கண்டுபிடித்துள்ள கருவி, விளையாடும்போது ஹெல்மெட்டில் அடிபட்டால், அந்த அடி விளையாட்டு வீரரின் மூளையைப் பாதிக்கும் அளவு பலமானதா என்பதை உடனே கண்டறிந்து தெரிவித்து விடும். உடனே வீரரைக் களத்திலிருந்து வெளியேற்றி, சிகிச்சைக்கு அனுப்ப முடியும். இதே போல ராணுவ வீரர்களுக்கான ஹெல்மெட்டுக்கான கருவியை வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜாக் டட்லியும் சிட்னி டயானியும் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாரும் எட்டாவது படிக்கும் மாணவர்கள். பென்சில்வேனியா மாணவன் மரியன் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக விலை மலிவான கருவியை உருவாக்கியிருக்கிறான். இவன் வயது 17.
அமெரிக்காவில் ஸ்டெம் எனப்படும் சயன்ஸ் (எஸ்), டெக்னாலஜி ( டி) , இன்ஜினீயரிங் (ஈ), மேதமேட்டிக்ஸ் ( எம்) ஆகியவற்றைப் பயிற்றுவதற்கான ஒரு லட்சம் பள்ளி ஆசிரியர்களை உருவாக்க, ஒபாமா எட்டுக் கோடி டாலர்களையும் இந்தத் துறைக் கல்வியை மேம்படுத்த இன்னொரு 10 கோடி டாலர்களையும் ஒதுக்கியிருக்கிறார்.
பணம் மட்டுமே இதில் விஷயம் அல்ல. இந்தியாவில் சில சமயங்களில் இதை விட அதிக பணம் கூட ஒதுக்கப்படுகிறது. அணுகுமுறையே முக்கியமானது. கல்வித் துறையின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் மன நிலை பெரும்பாலும் கூலிக்கு மாரடிப்பதாகவே இருக்கிறது. விதிவிலக்கானவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் பொது வாழ்க்கையில் இருக்கும் பல பிரபலங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு, புத்தகம் வாசித்துக் காட்டி அவர்களையும் கூடவே படிக்கச் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். இது ஓர் இயக்கமாகவே அங்கே செயல்படுகிறது. பல குடியரசுத் தலைவர்கள், அவர்களுடைய மனைவிகள், எழுத்தாளர்கள் இதைச் செய்கிறார்கள். அண்மையில் கூட ஒபாமா, டெக்சாஸ் கல்லூரியில் உரையாற்ற சென்றபோது, அதற்கு முன்னர் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குக் கதை படித்துக் காட்டினார். அவர்களின் வயது 5க்குக் கீழே. மொத்தம் எட்டே குழந்தைகள். அவரைச் சுற்றிலும் அரைவட்டமாக உட்கார, படக்கதையைப் படித்தார். நம் நாட்டில் எண்ணூறு மாணவர்களை, தம்மைச் சுற்றி உட்காரவைத்துக் கொண்டு போஸ் கொடுத்து இமேஜ் காட்டும் வேலை மட்டும்தான் நடந்திருக்கிறது. குடியரசு மாளிகையில் அறிவியல் கண்காட்சி ஏதும் நடந்ததும் இல்லை.
இந்தியாவிலும் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள், பரிசுகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை அரசின் விஞ்ஞானத்துறையின் கீழ் உள்ள ஆய்வகங்கள் சார்ந்ததாகவும் உயர்கல்வி முடித்தவர்களுக்கானவையுமாகவே இருக்கின்றன. பெரும்பாலும் பெலோஷிப் எனப்படும் உபகாரத் தொகைகள். அவை பள்ளி மட்டத்திலேயே ஆய்வை ஊக்குவிக்கவும் உதவவும் கூடிய சூழல் இங்கு இல்லை.
சென்ற வருடம் மத்திய அரசின் கவுன்சில் ஃபார் சயன்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்சின் பொன்விழா விருதுகள் சிறுவர்களுக்கானவை அறிவிக்கப்பட்டன. மொத்தம் வந்த கண்டுபிடிப்புகள் 353. இரண்டே பரிசுகள்தான் தரப்பட்டன. ரூபாய் பத்தாயிரம் பரிசுகள், பார்வையற்றோருக்கான இன்ஃப்ரா ரெட் கதிர் பயன்படுத்தி வழிகாட்டும் ஸ்மார்ட் கம்புகளை உருவாக்கிய தில்லி மாணவன் சந்தனுவும், பைகள்,ஜெர்கின்களில் இருக்கும் சிப்புகளைப் பூட்டுவதற்குப் புது மாடல் பூட்டை உருவாக்கியதற்காக பஞ்சாபைச் சேர்ந்த அன்கித் குமாரும் பெற்றனர். முதல் பரிசான ஐம்பதாயிரத்துக்குத் தகுதியாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் மெத்தப் படித்த இளைஞர்களில் கூடப் பெரும்பாலோர் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப சலிக்காமல் நேர்த்தியாகச் செய்து தரும் நல்ல வேலையாட்களாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறார்கள். உயர் ஆய்வுகள் செய்வதற்கான மனநிலை, துடிப்பு, உழைப்பு, அதற்கேற்ற வசதிகள், நெளிவு சுளிவான விதிமுறைகள் முதலியவற்றுடன் நம் இளைஞர்கள் உருவாவதற்கேற்ற சுழல் இங்கே நம் பள்ளிகள் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை இல்லை. இவற்றில் அக்கறை காட்டக்கூடிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் நம்மிடம் இல்லாததே இல்லை; எல்லாம் இருந்தது என்று கற்காலப் பெருமைகள் பற்றிப் புலம்புவோரும் அதையும் மெய்யென நம்புவோருமாக ஒரு கூட்டம் இருக்கிறது. எப்போது, எப்படி மாற்றம் வரும்? உங்களோடு சேர்ந்து நானும் ஏங்குகிறேன்.

–நன்றி கல்கி (ஓ பக்கங்கள்)










உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தை அல்லது தூரத்து உறவுக்காரரின் குழந்தையைப் பார்க்கிறீர்கள். அந்தக் குழந்தையின் பெயர் தெரியாது உங்களுக்கு. அப்போது, அந்தக் குழந்தையை… ‘ராமா, வாடா’ என்று அழைப்பீர்களா? ‘வாமனா இங்கே வா, சாக்லேட் தரேன்’ என்று சொல்வீர்களா? ‘நரசிம்மா, பக்கத்துல வந்தேன்னா, ஒரு கதை சொல்லுவேன்’ என்று அழைப்பீர்களா?
வைஷ்ணவ அடியவர்கள் அனைவரும் திருமண் (ஸ்ரீசூர்ணத்துடன்) இட்டுக் கொள்கிறார்களே, நாமும் இட்டுக்கொண்டு பார்ப்போமே என விரும்பினாராம் பகவான். ‘கற்கண்டு சாப்பிட்டேன். எவ்வளவு சுவையாக, பிரமாதமாக இருக்கிறது தெரியுமா?’ என்று ஒருவர் சொன்னால் போதுமா? கற்கண்டின் சுவை குறித்து காதாரக் கேட்டாலோ, அல்லது பேப்பரில் எழுதியிருப்பதைப் படித்தாலோ அந்தச் சுவையை உணர்ந்துவிட முடியுமா? இரண்டு கற்கண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால்தானே, அதன் சுவையை நம்மால் அறிய முடியும்?! அதனால், அடியவர்கள் திருமண் இட்டுக் கொள்வதால் கிடைக்கிற சுகானுபவத்தைத் தானும் அனுபவிக்க ஆவல் கொண்டார் பகவான். தவிர, திருமண் இட்டுக் கொள்ளுங்கள்; வெறும் நெற்றியாக இருக்காதீர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவும் அவர் திருமண் இட்டுக்கொண்டு காட்சியளித்தார்.





ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப் பட்ட கொடுமையை யூதர்கள் மறக்கவேயில்லை தங்கள் சந்ததியினருக்கு ஏராளமான சினிமாக்கள், டிராமாக்கள், ஆவணங்கள், மியூசியங்கள், புத்தகங்கள், நாவல்கள் மூலமாக மீண்டும் மீண்டும் மீண்டும் மிக அழுத்தமாக நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். வருங்கால யூதச் சந்ததியினர் தங்கள் முன்னோர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை மறந்து போனால் அவற்றை அலட்சியமாக நினைத்துத் தங்களை எதிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் அதே கொடுமை நாளைக்கு அவர்களுக்கும் நிகழலாம் என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள் யூதர்கள். வரலாற்றை மறப்பவர்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்வார்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டேயிருப்பார்கள்.
இத்திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்டிருந்த படமாக இருந்தாலும் கூட, நாஜி போர்க்குற்றவாளி ஐக்மேனைத் தேடிக் கண்டுபிடிப்பதும் பின்னர் அவனை தந்திரமாக இஸ்ரேல் விமானத்தில் கடத்திக் கொண்டு வருவதும் மிகப் பிரமாதமாகப் படமாக்கப் பட்டுள்ளது. ஐக்மேனை ரகசிய இடத்தில் வைத்து மொசாட் ஏஜெண்டுகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணை செய்யும் ஏஜெண்டான மைக்கேல் ஒருவர் மட்டுமே ஆய்ஸ்விச் நகரத்தில் இந்த ஐக்மான் யூதர்களைக் கொல்வதற்கான பணியில் இருந்ததை நேரடியாகப் பார்த்த சாட்சி. அவரிடமே அவனைக் கடத்தி விசாரிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. தனது இளம் சகோதரனை அந்தப் படுகொலையில் இழந்த மைக்கேல் மிகுந்த மன உளைச்சலுடன் ஐக்மானிடம் விசாரணை நடத்த நேருகிறது. ஒரு உயிரையாவது ஒரே ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவேயில்லையா என்று கேட்கிறார்.
மொசாட் அனுப்பும் ஏஜெண்ட் மைக்கேலின் வசனங்கள் கூர்மையானவை. டோபோல் என்ற நடிகர் பிரமாதமாக அதைச் செய்திருக்கிறார். இவரை பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து விட்டது. ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ரோஜர் மூருக்கு உதவி செய்பவராக வருவார். எளிதில் மறக்க முடியாத ஒரு கவர்ச்சிகரமான முகம். மைக்கேலின் உதவி ஏஜெண்ட் தனக்கு இந்த ஆப்பரேஷனில் உடன்பாடு இல்லை என்றும் நம்மால் வரலாற்றைத் திருப்ப முடியாது என்றும் பழசை மறந்து விட்டு நாம் வாழ வேண்டும் என்றும் கோழையாக மனம் தளர்ந்து தன்னை விட்டு விடுமாறு கோருகிறான். மைக்கேல் அவனுக்கு இந்த ஐக்மேனை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் ஏன் தண்டிக்க வேண்டும் ஏன் நாம் வரலாற்று சோகத்தை மறக்கக் கூடாது என்பதை விளக்குகிறார்.
அபு சலீம் – ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி 1993 மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களுள் முக்கியமான ஒருவன். குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிமின் ஒரு முக்கிய அடியாள். அவன் குண்டு வெடிப்புக்குப் பின்னால் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டான். அவனை இந்திய அரசின் உளவுப் பிரிவினரால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. மும்பைக் குண்டு வெடிப்பில் மட்டும் அல்லாது இந்தியாவில் ஏராளமான கொலை, கடத்தல் குற்றங்களையும் செய்தவன். ஆள்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பவன். பணத்துக்காகக் கொலைகள் செய்யும் ஒரு பயங்கரவாதி. அவனை 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் இண்டர்போல் போர்ச்சுக்கலின் லிஸ்பன் நகரத்தில் வைத்து அடையாளம் கண்டு இந்தியாவுக்குத் தகவல் தெரிவித்தது. அவனையும் அவனுடைய காதலியான நடிகை மோனிகா பேடியையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க போர்ச்சுக்கல் அரசு மறுத்து விட்டது. கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் பல நூறு பேர்களின் கொலைகளுக்குக் காரணமான கொடூரமான கொலைகாரனுக்கு நாங்கள் மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை போர்ச்சுக்கள் நீதிமன்றத்துக்கு இந்தியா கொடுத்த பின்பே கடும் போராட்டத்திற்குப் பின்பே 4 வருடச் சட்டப் போராட்டத்திற்கு பின்பே அவனை போர்ச்சுக்கல் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டது. இப்பொழுது அவனுக்கு கடுமையான தண்டனை எதையும் விதிக்காமல் தன் சிறையில் வைத்து உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது வரை அவனுக்கு எந்த வித தண்டனையையும் இந்திய கோர்ட்டுகள் வழங்கவில்லை. நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் படு கொலைகளுக்கு நீதி இந்தியாவில் வழங்கப் படவேயில்லை.
தாவூத் இப்ராஹிம் – 1993, 2008 மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் இந்தியாவில் பல ஆயிரம் கோடி கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத வணிகங்களுக்கும் மூளையாக, தலைவனாக இருக்கும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாதி. அவன் மீது நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற கொலைக் குற்றச் சாட்டு ஆதாரங்களுடன் சாட்டப் பட்டுள்ளது. இந்தியாவிற்குள் போதை மருந்து கடத்துவது இந்திய நகரங்களில் குண்டு வைத்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவது போன்ற எண்ணற்ற கொடூரமான சதிச் செயல்களை இன்று வரைத் தொடர்ந்து செய்து வருபவன். எண்ணற்ற அப்பாவி இந்துக்களின் உயிர்களைப் பறித்தச் சண்டாள அரக்கன். இந்தியாவின் இருப்பையே அழிக்க உறுதி பூண்டுள்ள ஒரு தேச விரோதி மனித குல விரோதி இந்த தாவூத். அமெரிக்க அரசு உட்பட பல நாடுகள் அவனை ஒரு உலக அளவிலான முக்கிய பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ளன. அவன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் வசிப்பதாக பல முறை இந்திய அரசு பாக்கிஸ்தான அரசிடமும் அமெரிக்க அரசிடமும் முறையிட்டு அவனை நாடு கடத்துமாறு கெஞ்சி வருகிறது. அவனை பாலிவுட்டின் நடிகைகளும் இந்தியாவின் பிற பயங்கரவாதிகளும் சந்திக்க முடிகின்றது. அவனது மகளின் திருமணத்தில் இந்தியர்கள் கலந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்று வரை அவனைக் கைது செய்து இந்தியா கொண்டு வர வக்கில்லாமல் இந்திய அரசு பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையிடமும் அமெரிக்க அரசிடமும் பிரிட்டனிடமும் இன்னும் பல நாடுகளிடமும் அவனைத் திருப்பித் தரக் கோரி மண்டியிட்டுக் கெஞ்சி வருகிறது. கிஞ்சித்தும் சுயமரியாதையும் தம் நாட்டுப் பிரஜைகளின் உயிர்களுக்கு மரியாதை அளிக்காமலும் இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு பயங்கரவாதியை இன்று வரைப் பிடித்து அவனால் கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாமல் இருக்கிறது இந்திய அரசு.
டைகர் மோமன், காந்தாஹார் விமானக் கடத்தல் பிணையினால் விடுவிக்கப் பட்ட பயங்கரவாதிகள் முதல் கடைசியாக நடந்த மும்பைக் குண்டு வெடிப்புகள் வரை இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடக்கும் அத்தனை விதமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் அனைத்து விதமான பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முடிகிறது. 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கும், அக்சர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் திட்டமிட்ட டேவிட் ஹெய்லி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியை அமெரிக்க அரசு பிடித்து விட்டாலும் கூட இந்திய உளவுத் துறையினர் அவனை விசாரிப்பதற்குக் கூட அனுமதி வழங்கப் படவில்லை.
இந்தியாவின் இறையாண்மையின் சின்னமாக விளங்கும் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு என்பவனை இந்தியாவின் உச்ச நீதி மன்றம் பலமுறை தூக்கிலுமாறு உத்தரவிட்டும் கூட இன்று வரை இந்தியாவை ஆளும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பிடிவாதமாக அவனுக்குத் தண்டனை அளிக்க மறுத்து வருகிறது. அவனைத் தூக்கில் போட்டால் முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற ஒரே காரணத்திற்காக கேடுகெட்ட காங்கிரஸ் அரசாங்கம் அவனைப் பாதுகாத்து வருகிறது.
படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை…
சான் ஃபெர்டினாண்டோ என்ற புற நகர்ப் பகுதியில் அமைந்த கரிபால்டி தெருவில் அவன் பாதுகாக்கப் பட்டு வருகிறான் என்ற ரகசிய செய்தி 1959ம் வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் ஜெர்மனியினாலேயே இஸ்ரேலின் உளவுப் பிரிவுக்கு கசிய விடப் படுகிறது. ஆரம்பத்தில் இந்தச் செய்தியை இஸ்ரேல் நம்பாவிட்டாலும் எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று முடிவு செய்கிறார்கள். இஸ்ரேலின் பிரதமர் பென் குரியன் நேரடியாகத் தலையிட்டு எப்பாடு பட்டேனும் இந்த ஐக்மேனை உயிரோடு இஸ்ரேலுக்குக் கடத்திக் கொண்டு வந்து விசாரிக்கப் பட்டுத் தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.


